ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர்

செய்தியில் தெரிந்த மேலே சொன்ன தலைப்பை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.
ஆஹா காங்கிரசுக்கு ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு வார்டிலும் இருக்கிறார்கள் என்று.
பிறகுதான் தெரிந்தது தமிழகம் மொத்தமாகவே சுமார் 1000 பேர்தான் உள்ளனர் என்று .

எது எப்படியோ மாறி மாறி திராவிடக் கட்சிகள் மேல் சவாரி செய்து விட்டு தனியே நிற்கும் போதுதான் தெரிகிறது தலை தப்புமா என்று .

இதே நிலை மற்ற உதிரிக் கட்சிகளுக்கும் பொருந்தும். 

பொறுத்திருந்து பார்ப்போம் உள்(கா) ஆட்சி தேர்தலை.

சனி, 28 மே, 2011

என்ன எழுதுவது

இன்று என்முதல் பதிவு. 
என்ன எழுதுவது என்று தெரியாமல் தொடங்குகிறேன் .
எழுதாமல் எழுதுகிறேன் . எதைப் பற்றி எழுதப் போகிறேன்?
 நாமாக புதியதை எழுதுவதா? அல்லது 
மற்றவர் எழுதியதைப் பற்றி நாம் எழுதுவதா?

எதை எழுதினாலும் படிப்பார்கள் என்பதால் எழுதுவதா?
எதையும் படிப்பார்கள் என்பதால் எழுதுவதா?

எழுதாமல் போனால் படிப்பார்களா?
படிக்காமல் போனால் எழுதுவதா? ஒரே குழப்பம். 
குழப்பமாய் எழுதினால் படிப்பார்களா?
எழுதியதைப் படித்து குழம்புவார்களா?

என்றாலும் எழுத துணிந்து விட்டேன் .
படிக்காமல் விட்டாலும் எழுதிக் கிடப்பேன்.

தொல்லையை தொடங்கியதற்கு தொடர்ந்து 
எழுதுவேன் "மன்னிப்பு' என்ற வார்த்தையை .

நன்றி